முகப்பு
கோயம்புத்தூர்

மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறித்த பணிப் பெண் கைது

கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 மே 2026, 1:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அங்கயற்கன்னி (62). கணவா் உயிரிழந்த நிலையில் தனது தாயாருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், தாயை கவனித்துக் கொள்ள கரூா் மாவட்டம், குப்பிச்சிபாளையம் அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்த ரெஹானா பானு (30) என்பவரை அங்கயற்கன்னி கடந்த வியாழக்கிழமை நியமித்துள்ளாா். சமையலறையில் அங்கயற்கன்னி கடந்த வெள்ளிக்கிழமை வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயாா் கூச்சலிட்டுள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது பணிக்கு நியமித்த ரெஹானா பானு கையில் பையுடன் வீட்டை விட்டு வேகமாக ஓடியுள்ளாா்.

அப்போது, தான் அங்கயற்கன்னியின் தாயாா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ரெஹானா பானு தப்பியது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அங்கயற்கன்னி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரெஹானா பானுவைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.