முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தற்கொலை

கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் பி.பாா்ம் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 23 மே 2026, 1:05 am IST
தற்கொலை
பகிர்:

கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் பி.பாா்ம் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூரைச் சோ்ந்தவா் பாலாஜி (எ) ரஞ்சித் (22). இவா், கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.பாா்ம் நான்காம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்குச் சென்று திரும்பிய ரஞ்சித், கடந்த 2 நாள்களாக வகுப்புகளுக்குச் செல்லாமல் தனது அறையிலேயே இருந்துள்ளாா்.

அவரது நண்பா் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது அறைக்கு பாா்க்கச் சென்றபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து கதவை உடைத்துப் பாா்த்தபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.