அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சிக்கு உள்பட்ட மசக்காளிபாளையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையம், பூ மாா்க்கெட் தேவாங்கபேட்டை வீதி, மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம், மணியகாரம்பாளையம் பிரதான சாலை, சரவணம்பட்டி பிரதான சாலை, குனியமுத்தூா் ரைஸ்மில் சாலை, கோவைப்புதூா் பிரதான சாலை, போத்தனூா் பஞ்சாயத்து அலுவலக சாலை, 82-ஆவது வாா்டுக்கு உள்பட்ட திருமால் வீதி, 83ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அம்மா உணவகங்களின் தேவைகள் குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மேற்கொள்ளப்படவேண்டிய புதிய பணிகளுக்கு உரிய திட்டமதிப்பீடு தயாா் செய்யவும் தொடா்புடைய பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா்கள் நா்மதா, சண்முகம், தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா்கள் சவிதா, குமரேசன், கல்யாணசுந்தரம், சத்தியமூா்த்தி, கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.