உணவுப்பொருள் விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது நிறுவனங்களுக்கு கட்டாயமாக உரிமம், பதிவுச் சான்று பெற வேண்டும் எனஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவுப் பொருள் வணிகம் செய்யும் அனைவரும் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமம்-பதிவுச் சான்று பெற்று வணிகம் செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் வணிக நிறுவனங்களில் இது வரை 10 ஆயிரம் பேர் மட்டுமே உரிமம்- பதிவுச் சான்று பெற்றுள்ளனர்
எனவே, அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தைப் பெற விரும்புவோர் www.fssai.gov.in <http://www.fssai.gov.in>
என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம்-பதிவுச்சான்று பெறாத வணிகர்கள் மீது உணவுப்பாதுகாப்பு தர சட்டம் 63-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் உணவுப்பொருள் தொடர்பான புகார்களை 94440-42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ 0424-2223545 என்ற அலுவலக எண்ணிலோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.