ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் உயிர்த் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

DIN

மொடக்குறிச்சியில் நடைபெற்ற சிறு, குறு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், கீழ்பவானி வாய்க்காலில் உயிர்த் தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  மொடக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்க மாநிலத் தலைவர் சுதந்திரராசு தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தற்போது நிலவும் வறட்சியைப்போக்க கீழ்பவானி வாய்க்காலில் உடனடியாக உயிர்த் தண்ணீர் திறக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 இக்கூட்டத்தில், மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, லக்காபுரம், கணபதிபாளையம், கருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT