ஈரோடு

பெருந்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

DIN

பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை வெள்ளிக்கிழமை கைவிட்டனர்.
 பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர் நல்லசாமி. இவர், மொடக்குறிச்சி வட்டம், பழமங்கலம் கிராமத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
 இதைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர், பெருந்துறை வட்டாட்சியர்  அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 ஈரோடு கோட்டாட்சியர் நர்மதாதேவி, கிராம நிர்வாக அலுவலக சங்க நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை
நடத்தினர். நல்லசாமி, பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT