ஈரோடு

காஞ்சிக்கோவில் - சித்தோடு சாலையில் ரூ. 97.70 லட்சத்தில் புதிய பாலம்

DIN

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் - சித்தோடு சாலையில் ரூ. 97.70 லட்சத்தில் புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் காஞ்சிக்கோவில் - சித்தோடு சாலையில் உயர்மட்டப் பாலம் ரூ. 97.70 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி, பெருந்துறை மருத்துவமனை அருகில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணி ஆகிய இரண்டு பணிகளையும், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தார்.
இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.பி.பரமசிவம், நகரச் செயலாளர் சீதப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT