ஈரோடு

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

DIN

ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க (ரெட் கிராஸ்) புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
கல்லூரியின் செஞ்சுருள் சங்க கிளை பதவியேற்பு விழாவுக்கு, கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் என்.ராமன், செஞ்சுள் சங்க மாவட்டச் செயலர் ஜார்ஜ், கல்வி மாவட்ட அமைப்பாளர் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க மாவட்ட கெளரவ செயலர் தாமஸ் வி.ஜான்
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கல்லூரியின் செஞ்சுருள் சங்க மாணவர் பிரிவுத் தலைவராக எம்.எஸ்.சரத் மனோ, செயலராக சி.ரக்ஷனா, துணைத் தலைவராக பி.கார்த்திக், இணைச் செயலராக ஆர்.கவின், செயற்குழு உறுப்பினர்களாக 6 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
கல்லூரி செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் வரவேற்றார். செஞ்சுருள் சங்க உறுப்பினர் பேராசிரியர் ஆகாஷ் நாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT