ஈரோடு

மின்னல் தாக்கியதில் சத்துணவு சமையலர் சாவு

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தில் திங்கள்கிழமை இரவு இடியுடன் மின்னல் தாக்கியதில் சத்துணவு சமையலர் பிரியா உயிரிழந்தார்.
 சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரியா (30), பசுவாபாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வந்தார். பிரியா திங்கள்கிழமை இரவு தோட்டத்தில் பூப்பறிப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது.
செடியில் பறித்த பூக்களை எடுத்து வந்தபோது இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
மின்னல் தாக்கியதில் அவரது செல்லிடப்பேசியும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் பிரியாவைத் தேடியுள்ளனர். 
அப்போது, பிரியா தோட்டத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அவரை சோதனையிட்டபோது மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரியவந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT