ஈரோடு

சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி

DIN

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 14 ஆவது மாநில மாநாடு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கி ஈரோடு தாலுகா அலுவலகம் வரை நடைபெற்ற பேரணிக்கு, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தனுஷ்கோடி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.பாஸ்கர்பாபு பேரணியைத் தொடக்கிவைத்தார்.
 சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசு மானியத்தை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 இதில், மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் உஷாராணி, கண் மருத்துவ உதவியாளர் சங்கம் சுகுமார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT