ஈரோடு

பிளஸ் 2 தேர்வு: மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் பள்ளி சிறப்பிடம்

DIN


பிளஸ்2 பொதுத் தேர்வில் ஈரோடு,  ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 
இங்கு தேர்வு எழுதிய 168 மாணவர்களும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். 600-க்கு 564 மதிப்பெண் ஒருவரும், 560 மதிப்பெண் ஒருவரும், 549 மதிப்பெண் ஒருவரும் பெற்றனர். 
தேர்வு எழுதிய 168 மாணவர்களில் 99 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியலில் ஒரு மாணவி 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பள்ளி நிர்வாக அலுவலர் பி.அர்த்தனாரிசாமி, தலைமையாசிரியை எ.கீதா, ஆசிரியர்கள் ஆகியோருக்கு பள்ளித் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல்,  செயலாளர் எஸ்.சிவானந்தன்,  தாளாளர் என்.மோகன்ராஜ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT