ஈரோடு

எழுமாத்தூர் பாரதியார் பல்கலை.  கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

DIN

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் சி.வடிவேல் தெரிவித்துள்ளதாவது: 
எழுமாத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. 
இந்த ஆண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பி.காம், பி.காம் (சி.ஏ), பி.சி.ஏ உள்ளிட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பித்து ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் ரூ. 50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT