அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா தலைமை வகித்தார். அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலாம்பாளையம், மாத்தூர் மாதிரிப் பள்ளி, அத்தாணி அரசினர் மேல்நிலைப் பள்ளி என 17 பள்ளிகளைச் சேர்ந்த 131 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மேலும், தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டுகள் 850 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. விழாவுக்கு, பவானி மாவட்டக் கல்வி அலுவலர் ராமன் முன்னிலை வகித்தார். அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் த.செல்வராஜ் வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் தாமோதரன், அந்தியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் இ.செல்வராஜ், எஸ்.பாலுசாமி, எஸ்.பி.ரமேஷ், குருராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.