ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 517 கன அடியாக சரிவு

DIN

பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 517 கன அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிய ஆரம்பித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரம் 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி, வடகேரளத்தில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியது.
இதையடுத்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. 
இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி 3,542 கன அடியாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 517 கன அடியாக குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் சரிய ஆரம்பித்துள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், பவானி ஆற்றில் 1,350 கன அடி நீரும் என மொத்தம் 3,650 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 94.08 அடியாகவும், நீர் இருப்பு 24.3 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் குறையும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT