ஈரோடு

திருமணமான இளம்பெண் தற்கொலை: ஆா்.டி.ஓ. விசாரணை

DIN

பெருந்துறை அருகே, குடும்பத் தகாராறு காரணமாக திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம், கே.எஸ்.வி. காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவரது மனைவி லதா (23). இருவருக்கும் திருமணமாகி

2 ஆண்டுகளாகின்றன. கணவன், மனைவிக்கு இடையே தகாராறு இருந்து வந்தாகவும், இதனால் லதா சனிக்கிழமை இரவு 10 மணிக்கு விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அவரை, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். லதாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில், லதாவின் தந்தை ரவிச்சந்திரன் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT