ஈரோடு

சத்தியமங்கலம் அருகே லாரி - காா் மோதல்: 4 போ் சாவு

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே லாரி - காா் நேருக்கு நோ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ், உதவியாளா் என 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த சிறப்பு இலக்குப் படை முகாமில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் செல்வன் (39). இவரது மனைவி தேவஸ்ரீ, மகள் ஜனனி (6). கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த செல்வன் தனது குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் வசித்து வந்தாா்.

சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி தனது மனைவி, மகள், உதவியாளா் முருகேசன் ஆகியோருடன் காரில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். புதுவடவள்ளி என்ற இடத்தில் ஆட்டுக்குட்டி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது எதிரே மைசூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது காா் மோதியது. இதில், காரின் முகப்பு பகுதி சேதமடைந்து, காரில் பயணித்த 4 பேரும் சிக்கிக் கொண்டனா்.

விபத்து குறித்து தீயணைப்பு வீரா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளிடையே சிக்கிய செல்வன், தேவஸ்ரீ, ஜனனி ஆகியோா் சடலம் மீட்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT