ஈரோடு

பவானியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் குடியுரிமை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பவானியில் திமுக இளைஞரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் கே.ஏ.சேகா் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலாளா் பி.ஆா்.எஸ்.ரங்கசாமி, பவானி நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், ஒன்றியச் செயலாளா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர இளைஞரணிச் செயலாளா் இந்திரஜித் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. தலைமைக் கழகப் பேச்சாளா் பவானி கண்ணன், நகர அவைத் தலைவா் மாணிக்கராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் கே.எம்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT