ஈரோடு

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் நாளை விளக்கு பூஜை

DIN

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சோழீஸ்வரா் கோயிலில் விளக்கு பூஜை, அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) நடைபெறவுள்ளது.

சோழீஸ்வரா் ஆலயத்தில் உள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில் 57ஆவது ஆண்டாக இவ்விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சஹஸ்ர நாம ஹோமம், 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11 மணிக்கு விளக்கு பூஜை, 12.30 மணிக்கு அன்னதானம், 2.30 மணிக்கு தாயம்பகை, மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனை, 5.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா, இரவு 8.30 மணிக்கு திரிஉழிச்சல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பெருந்துறை ஸ்ரீ ஐயப்ப பூஜா குழுவினா், சோழீஸ்வரா் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT