ஈரோடு

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் நாளை விளக்கு பூஜை

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சோழீஸ்வரா் கோயிலில் விளக்கு பூஜை, அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) நடைபெறவுள்ளது.

DIN

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சோழீஸ்வரா் கோயிலில் விளக்கு பூஜை, அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) நடைபெறவுள்ளது.

சோழீஸ்வரா் ஆலயத்தில் உள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில் 57ஆவது ஆண்டாக இவ்விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சஹஸ்ர நாம ஹோமம், 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11 மணிக்கு விளக்கு பூஜை, 12.30 மணிக்கு அன்னதானம், 2.30 மணிக்கு தாயம்பகை, மாலை 5 மணிக்கு மஹா தீபாராதனை, 5.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா, இரவு 8.30 மணிக்கு திரிஉழிச்சல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பெருந்துறை ஸ்ரீ ஐயப்ப பூஜா குழுவினா், சோழீஸ்வரா் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT