ஈரோடு

காற்று ஒலிப்பான் பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு அபராதம்

DIN

காற்று ஒலிப்பான்களைப்  பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸார் திங்கள்கிழமை மாலை ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் மாவட்டம், கொளத்தூரில் இருந்து ஈரோடு வந்த தனியார் பேருந்து, பவானியில் இருந்து வந்த தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது தெரியவந்தது.   
இந்தப் பேருந்துகளை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் கொளத்தூரில் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அபராதத்தைக் கட்டாமல் பேருந்தை எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT