ஈரோடு

மேட்டூர் மேற்குக்கரை வாய்க்காலில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்

DIN


மேட்டூர் அணையின் மேற்குக்கரை பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களை சீரமைக்க ரூ.ஒரு கோடியில் குடிமராமத்துப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் குடிமராமத்துப் பணி திட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை மற்றும் பூதப்பாடி பகுதியில் 4 கிளை வாய்க்கால்களில் விவசாய சங்கங்கள் மூலம் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல், மதகுகள் பழுது பார்த்தல், பழுதடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.98.90 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அணையில் இருந்து பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போது  தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் இப்பணிகளை மேட்டூர் கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி.திருமூர்த்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
மேட்டூர் கால்வாய் பிரிவு உதவிப்  பொறியாளர் எஸ்.சாமிநாதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT