ஈரோடு

வேன் மோதியதில் இளைஞர் பலி

DIN

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் வேன் மோதியதில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி, அயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். 
இந்நிலையில், கோனமூக்கனூர் பிரிவு அருகே பிரபு சாலையோரத்தில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு வேன், அவர் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT