ஈரோடு

வேன் மோதியதில் இளைஞர் பலி

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் வேன் மோதியதில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 

DIN

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் வேன் மோதியதில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி, அயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். 
இந்நிலையில், கோனமூக்கனூர் பிரிவு அருகே பிரபு சாலையோரத்தில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு வேன், அவர் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT