ஈரோடு

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் மழைவேண்டி வருண ஜெபம்

DIN

மழை பெய்ய வேண்டி, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் வருண ஜெபம் மற்றும் ருத்ர ஹோம வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. 
சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தி சிலை தண்ணீரில் மூழ்கும் வகையில் தொட்டி கட்டப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டது. 
தொடர்ந்து, நந்திக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சங்கமேஸ்வரருக்கு மழை வேண்டி வருண ஜெபமும், ருத்ர யாகமும் நடத்தப்பட்டது. 
இதையடுத்து, ஆதிகேசவப் பெருமாளுக்கு திருமஞ்சன வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT