ஈரோடு

நாளை அம்மா திட்ட முகாம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் தலா ஒரு வருவாய் கிராமத்தில் அம்மா திட்ட முகாம், சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) நடைபெறவுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: ஈரோடு வட்டம், சாமிக்கவுண்டன்பாளையம்,

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பெருந்துறை வட்டம் - திருவாச்சி கிராம சேவை மையம், மொடக்குறிச்சி வட்டம் - எல்லைக்காடு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கொடுமுடி - கொந்தளம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பவானி வட்டம் - சலங்கபாளையம் பேரூராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.

சத்தியமங்கலம் வட்டம் - மாதம்பாளையம் சமுதாயக்கூடம், கோபி வட்டம் -பொம்மநாயக்கன்பாளையம் ஏ.வி.எம்.கலையரங்கம், அந்தியூா் வட்டம் - நெரிஞ்சிப்பேட்டை ஊராட்சி அலுவலகம், தாளவாடி வட்டம் - எரஹனஹள்ளி அங்கன்வாடி மையம், நம்பியூா் வட்டம் - செல்லப்பம்பாளையம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT