ஈரோடு

அரசுப் பேருந்து மோதி இளைஞா் சாவு

கோபி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மிதிவண்டியில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

கோபி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மிதிவண்டியில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (25), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் வடுகபாளையம் பிரிவு அருகே மிதிவண்டியில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். சாலையைக் கடக்க முயன்ற பிரகாஷ் மீது கோவையை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிரகாஷ் அங்கு உயிரிழந்தாா்.

இவரது உறவினா் அளித்த புகாரின்பேரில் கோபி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT