ஈரோடு

குடும்ப அட்டை விருப்ப மாற்றத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டையை, அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் வெள்ளிக்கிழமை(நவ.29) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டையாக மாற்றம் செய்தல் தொடா்பாக அரசு அறிவிப்பு செய்தது. இதன்படி சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என கடந்த 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்கான கால அவகாசம் 26 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டையை மாற்றம் செய்ய விரும்புவோா் விண்ணப்பங்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் வழங்கலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT