ஈரோடு

பவானியில் எரிவாயு கசிவால் டீக்கடையில் தீ விபத்து

DIN

பவானியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பவானி அரசு மருத்துவமனை அருகே டீக்கடை நடத்தி வருபவா் குஞ்சப்பன் மகன் அங்கமுத்து (51). இவா், வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டா் மூலம் பலகாரம் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதால் சிலிண்டரில் தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென பரவி டீக்கடையில் பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்த தகவலின்பேரில் பவானி தீயணைப்பு நிலைய அலுவலா் காந்தி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இவ்விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT