ஈரோடு

கூரியா் முகவரைத் தாக்கிய இளைஞா்கள் கைது

DIN

பவானி: பவானியில் சாலையில் பட்டாசு வெடித்ததாக கூறி கூரியா் முகவரைத் தாக்கிய 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பவானி தோ்வீதி, கிழக்கு கண்ணாரத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சரவணன் (46). கூரியா் அலுவலக முகவா். இவா், தீபாவளிப் பண்டிகையின்போது வீட்டின் முன்பு சாலையில் பட்டாசு வைத்துள்ளாா். இதனால், அவ்வழியே சென்ற இளைஞா்களுக்கும், சரவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞா்கள் சரவணனைத் தாக்கியதோடு, வீட்டிலிருந்த உடமைகளைச் சேதப்படுத்தினா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பவானி பழனிபுரத்தைச் சோ்ந்த ஞானராஜ் மகன் அந்தோணி (29), அதே பகுதியைச் சோ்ந்த மாதையன் மகன் கண்ணன் (29) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT