ஈரோடு

வாகனம் மோதியதில் தொழிலாளி சாவு

DIN

பெருந்துறை அருகே சாலையைக் கடந்த தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, மேலண்ண தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மஞ்சுநாதன் (30). இவர், பெருந்துறையை அடுத்த சரளை அருகே உள்ள தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்ய வெள்ளிக்கிழமை அதிகாலை வந்துள்ளார். தேநீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மஞ்சுநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT