ஈரோடு

ரூ.1.50 கோடி செலவில் சாலைப் பணிகள் துவக்கம்

DIN

ஈரோட்டில் ரூ.1.50 கோடி செலவில் புதிய தாா் சாலைப் பணிகளை எம்.எல்.ஏக்கள் தொடங்கிவைத்தனா்.

ஈரோடு, கனிராவுத்தா் குளம் பாரதி நகா், காந்தி நகா், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் புதிய தாா் சாலைகள் அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் புதிய தாா் சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

இதில், அதிமுக பகுதி செயலாளா்கள் ஜெகதீசன், கோவிந்தராஜன், முருகுசேகா், மாணவா் அணி மாவட்டச் செயலாளா் ரத்தன்பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT