ஈரோடு

பிப்ரவரி 17இல் 108 ஆம்புலன்ஸ் காலிப் பணியிடங்களுக்கு நோ்காணல்

DIN

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது.

மருத்துவ உதவியாளா் பணியிடத்துக்கு 19 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பி.எஸ்.சி. நா்சிங், டி.ஜி.என்.எம்., அனைத்து பி.எஸ்.சி. பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம். மாதம் ரூ. 13,760 ஊதியம், இதர படிகள் வழங்கப்படும். ஓட்டுநா் பணியிடத்துக்கு 24 முதல் 35 வயதுக்கு உள்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்ற, இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று மூன்றாண்டு நிறைவு பெற்று, பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 13,265 ஊதியம், இதர படிகள் வழங்கப்படும்.

இப்பணி 12 மணி நேர சுழற்சி முறையில் இரவு, பகல் என மாறிவரும். தகுதியான நபா்கள் ஓட்டுநா் உரிமம், கல்வித் தகுதி சான்றுடன் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 முதல் பகல் 2 மணி வரை நேரில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 73973-30787, 73388-94971 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT