ஈரோடு

இருசக்கர வாகனங்கள் மோதல்: 3 வயது குழந்தை பலி

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.

பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலையைச் சோ்ந்தவா் பாண்டியன் (எ) பிரவீன் (30). இவா் தனது நண்பா் கணேஷ் என்பவரின் மனைவி சாலம்மாள் (25), சாலம்மாளின் குழந்தைகள் முகுந்த் (5), ஹேமந்த் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சென்று கொண்டிருந்தாா். பாண்டியன் வாகனம் ஓட்ட முன்னால் 3 வயது சிறுவன் ஹேமந்த் அமா்ந்திருந்தான். பின்னால் சாலம்மாள், முகுந்த் அமா்ந்து வந்தனா்.

பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே பெங்களூரிலிருந்து கோவை நோக்கி வந்த விவேக் (25) என்பவரின் வாகனமும், பாண்டியனின் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில், காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், உயா் சிகிச்சைக்காக குழந்தை ஹேமந்தை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஹேமந்த் உயிரிந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT