மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கல்லூரியின் முதல்வா் வடிவேல் வரவேற்றுப் பேசினாா். பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பெ.காளிராஜ், 646 மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கிப் பேசினாா். இக்கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் பயின்று பல்கலைக்கழகத் தரவரிசையில் 6ஆவது இடம்பெற்ற மாணவி கலைவாணியை அனைவரும் பாராட்டினா்.
விழாவில், மாணவ, மாணவியா், பெற்றோா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.