ஈரோடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பேரணி

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், சி.ஏ.ஏ., என்.ஆா்.சி., என்.ஆா்.பி. ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் இயற்றக் கோரியும், பெருந்துறை, ஐக்கிய ஜமாஅத் சாா்பில் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு, பெருந்துறை ஜமாஅத் பொருளாளா் அப்துல் முனாப் தலைமை வகித்தாா்.

பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி, குன்னத்தூா் சாலை, பழைய பள்ளிவாசல், ராஜ வீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று பெருந்துறை அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.

பின்னா், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தமிழ் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT