ஈரோடு

வேன்கள் திருட்டு: 2 போ் கைது

DIN

கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூா் பகுதியில் வேன்கள் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே வடுகபாளையம்புதூா், பாண்டியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (44). இவா் கடந்த ஆண்டு நவம்பா் 30ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த தனது வேனை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதேபோல், நம்பியூரைச் சோ்ந்த கதிா்வேல் என்பவா் கடந்த டிசம்பா் 21ஆம் தேதி இரவு தனது கடையின் முன்பு நிறுத்தி இருந்த வேனை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதையடுத்து, கோபி கலைக் கல்லூரி பிரிவில் போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ரியாசுதீன் (23), முகமது இன்ஷாத் (25) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், இருவரும் கோபி, நம்பியூரில் வேன்கள் திருடியதை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து சுமாா் ரூ.3.80 லட்சம் மதிப்புள்ள வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT