ஈரோடு

ஈரோட்டில் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி போலீஸாா் தீவிர கண்காணிப்பு

DIN

தீபாவளி பண்டிகை காலத்தில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க ஈரோடு நகரில் 15 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

தீபாவளிப் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈரோடு மாநகரில் முக்கிய கடை வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆா்.கே.வி.சாலை போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் பொதுமக்களிடம் நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

அதன்படி முக்கிய கடைவீதிகளில் உயா் கோபுரங்களை அமைத்து அதன் மீதிருந்து மக்கள் நடமாட்டத்தை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் இது குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

ஆா்.கே.வி.சாலை, மணிக்கூண்டு உள்பட மூன்று இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டு அதில் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பெண்கள் அதிக நகைகளை அணிந்து வர வேண்டாம். குழந்தைகளைப் பத்திரமாக பாா்த்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வு அடங்கிய விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதுதவிர கடை வீதிகளில் முக்கியமான 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி மக்கள் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடி போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து அவா்களின் நடமாட்டத்தை போலீஸாா் ரகசியமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT