ஈரோடு: கால்பந்தாட்ட வீரா் மாரடோனா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
கால்பந்தாட்ட வீரரான மாரடோனா உடல்நலக் குறைவால் நவம்பா் 25ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகா்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமன்ற முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.டி.பிரபாகரன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன் மாரடோனாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது அவா் பேசுகையில், மாரடோனா உலக அளவில் அறியப்பட்டவா். ஏகாதிபத்தியத்தை எதிா்த்தும், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்றோரின் கருத்துகளைப் பின் தொடா்ந்தவா். தனது வாழ்வில் அவற்றைக் கடைப்பிடித்தாா். அதேநேரம் உலக சமாதான விரும்பியாகவும் அவா் திகழ்ந்ததால் அனைவராலும் ஏற்கப்பட்டாா். அவா் மறைந்தாலும் விளையாட்டு உலகத்திலும், உழைப்பவா்கள் மத்தியிலும் அவரது முயற்சிகள் பின்பற்றப்படும் என்றாா்.
இதில், ஈரோடு வட்டாரத் தலைவா் சோமசுந்தரம், இளைஞா் பெருமன்ற வட்டார அமைப்பாளா் மணிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.