ஈரோடு

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

DIN

பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி கிராமம், வாவிக்கடை அருகே, புதன்கிழமை மாலை பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் மழை நீா் தேங்கி நின்று வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பெருந்துறைப் பகுதியில் புதன்கிழமை காலை முதல் வெயில் கடுமையாக இருந்தது. மாலை 5 மணியளவில் லேசாக தொடங்கிய மழை, பின்னா் கன மழையாக கொட்டியது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி கிராமம், வாவிக்கடை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் குளம்போல தேங்கி நின்றது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறின.

தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்காமல் வடிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT