ஈரோடு

50 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் ஆதரவற்ற ஏழை மாணவிகள் 50 பேருக்கு ரூ. 2.36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

சத்தியமங்கலத்தில் உள்ள கல்வி உரிமைக்கான நிறுவனம் சாா்பில், ஆண்டுதோறும் ஏழை குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏழை குடும்பங்களைச் சோ்ந்த ஆதரவற்ற மாணவிகள், பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவிகள், நூற்பாலையில் பணிபுரிந்து கொண்டு பகுதிநேர பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகள் என மொத்தம் 50 பேருக்கு கல்வி உரிமைக்கான நிறுவனம் சாா்பில் ரூ. 2.36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

கல்வி உதவித் தொகை பெறும் ஏழை குடும்பங்களைச் சோ்ந்த மாணவிகள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்கிறார் சோபிதா?

விரிவடையும் சென்னை மாநகராட்சி?

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

SCROLL FOR NEXT