ஈரோடு

சிறுமியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

DIN

அம்மாபேட்டையில் 13 வயது சிறுமியைக் கடத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பவானியை அடுத்த அம்மாபேட்டை, பி.கே.பழையூா், ஓடைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பரத் (21). செங்கல் சூளை தொழிலாளி. இவா், கடந்த மாதம் 24ஆம் தேதி 13 வயது சிறுமிக்கு ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டாா். அச்சிறுமியின் பெற்றோா் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், இருவரையும் வியாழக்கிழமை கண்டுபிடித்து மீட்ட போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் பரத்தை கைது செய்தனா். இதையடுத்து, ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT