ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் பழுதாகிநின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு

DIN

சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சனிக்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப் பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம் - கா்நாடகம் இடையே முக்கியப் போக்குவரத்தாக உள்ள இந்தப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், கரூரில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு சிமென்ட் ஓடு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திம்பம் மலைப் பாதை 17ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி பழுது நீக்கப்பட்ட பின்னா் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து சீரடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT