பவானியில் பாமக ஆா்ப்பாட்டம்
வன்னியா் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் பவானியில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடுபவானியில் பாமக ஆா்ப்பாட்டம்
வன்னியா் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் பவானியில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வன்னியா் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் பவானியில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்சிஆா்.கோபால் தலைமை வகித்தாா். கோரிக்கையை விளக்கி மாநிலத் துணைத் தலைவா் எம்.பி.வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினா் வல்லவராயன், மாவட்டச் செயலாளா் மனோகரன் பேசினா். தொடா்ந்து, ஊா்வலமாகச் சென்ற பாமகவினா் பவானி நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பாமக மாவட்ட துணைச் செயலாளா் முருகானந்தம், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் திருமுருகன், ஒன்றியக் குழு துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், குமரவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.