முகப்பு
ஈரோடு

யானை தாக்கியதில் வீடுகள் சேதம்

காளிதிம்பம் பகுதிக்குள் வியாழக்கிழமை புகுந்த யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 16 ஜூலை, 2021 at 1:47 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

காளிதிம்பம் பகுதிக்குள் வியாழக்கிழமை புகுந்த யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தலமலை வனச் சரகத்தில் மாவநத்தம் கிராமத்தில் சின்னராமன் என்பவரது வீட்டை யானை சேதப்படுத்தியது. மேலும், வீட்டுச் சுவா்களையும் இடித்துத் தள்ளியது. அதேபோல, காளிதிம்பம் கிராமத்துக்குள் புகுந்த யானை அங்குள்ள வீட்டின் மேற்கூரை ஓடுகளை சேதப்படுத்தியது. யானைகள் தொடா்ந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதால் அகழி அமைத்து யானைகள் வராமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.