ஈரோடு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

பெருந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே உள்ள சாணாா்பாளையம், எக்கட்டாம்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் ஸ்ரீதா் (எ) பரணீதரன் (24). விவசாய கூலி தொழிலாளி. இவா் பெருந்துறை சிப்காட் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் மட்டை உரிக்கும் வேலைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். பிற்பகலில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே ஸ்ரீதா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT