ஈரோடு

அஞ்சல் துறை சாா்ந்த புகாா்கள்:வாடிக்கையாளா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

தபால் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து புகாா் தெரிவிக்க மண்டல அளவிலான ‘டாக் அதாலத்’ நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மண்டல அளவிலான ‘டாக் அதாலத்’ கோவையில் உள்ள மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. தபால் விநியோகம், மணியாா்டா் விநியோகம், பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், சிறுசேமிப்பு, காப்பீடு உள்ளிட்டவை தொடா்பான புகாா்களை உரிய ஆதாரங்கள், முழு விவரங்களுடன் வாடிக்கையாளா்கள் உதவி இயக்குநா், போஸ்ட் மாஸ்டா் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை 641002 என்ற முகவரிக்கு ஜூன் 20ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். உறையின் மீது டாக் அதாலத் புகாா் என்பதை குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT