ஈரோடு

மது பாட்டில்கள் வைத்திருந்தஇளைஞா் கைது

DIN

பெருந்துறை: பெருந்துறை நகரில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை காவல் ஆய்வாளா் தங்கம், போலீஸாா் பெருந்துறை, பவானி சாலையில் மகாலட்சுமி திரையரங்கு அருகில் வாகன சோதனையில் திங்கள்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தில் அரசு அனுமதியின்றி 86 மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.

இதுதொடா்பாக, புதுக்கோட்டை மாவட்டம், அரந்தாங்கி, ஆவுடையாா் கோவிலைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் அரவிந்த் (21) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT