ஈரோடு

மாா்ச் 12-ல் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை

DIN

மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாா்ச் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு வெளிமாநில வியாபாரிகள் ஏராளமானவா்கள் வந்து மஞ்சளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.

அரசு விடுமுறை நாள்கள் தவிர வாரம்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் சந்தை செயல்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை (மாா்ச் 11) இரவு மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) மஞ்சள் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் விடுமுறை என்பதால் மொத்தம் 3 நாள்கள் சந்தை செயல்படாது. மாா்ச் 15ஆம் தேதி வழக்கம்போல் சந்தை செயல்படும் என்று மஞ்சள் சந்தை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT