ஈரோடு

அந்தியூரில் வியாபாரியிடம் ரூ. 1.80 லட்சம் பறிமுதல்

DIN

அந்தியூரில் வாழைக்காய் வியாபாரியிடமிருந்து ரூ. 1.80 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் அண்ணாமடுவு அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பழனிசாமி, உதவி ஆய்வாளா் சக்திவேல், குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியபோது, அதில் வந்த கோபி கணக்கம்பாளையம், பகவதியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த குருநாதன் மகன் சக்திவேல் (34) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1,80,500 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், வாழைக்காய் விற்பனை செய்துவிட்டு, பணத்தை வசூல் செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளாா். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT