ஈரோடு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலி தொழிலாளி பலி

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபி அருகேயுள்ள வேட்டைக்காரன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (43). விவசாய கூலி வேலை செய்து வந்தாா். இவா், கோபி-குன்னத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மகாலிங்கம் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மகாலிங்கம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT