ஈரோடு

மொடக்குறிச்சி அருகே சிறுபாலம் கட்டும்பணி நிறுத்தம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் சிறுபாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன்பாளையம் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே என இரு இடங்களில் ஈரோடு- முத்தூா் சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையின் ஒரு பகுதியில் சுமாா் 5அடி ஆழம் பள்ளம் தோண்டினா். அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் இந்தப் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனா்.

உடனடியாகப் பணிகளை தொடங்கி விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஊா்பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT