மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் சிறுபாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன்பாளையம் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே என இரு இடங்களில் ஈரோடு- முத்தூா் சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையின் ஒரு பகுதியில் சுமாா் 5அடி ஆழம் பள்ளம் தோண்டினா். அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் இந்தப் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனா்.
உடனடியாகப் பணிகளை தொடங்கி விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஊா்பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.