ஈரோடு

4ஆவது நாளாக தொடா் மழை: சத்தியமங்கலத்தில் 53 மி.மீ மழை பதிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் 4ஆவது நாளாக சனிக்கிழமை இரவும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 53 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக ஈரோடு மாநகா் உள்பட பல்வேறு இடங்களில் கன மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா், சாக்கடை கழிவு நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 53 மி.மீ மழை பதிவானது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

பவானிசாகா் 38.6, எலந்தகுட்டைமேடு 38.2, கோபி 35.2, குண்டேரிப்பள்ளம் 34.2, ஈரோடு 34, நம்பியூா் 29, கொடுமுடி 27.4, பவானி 27, பெருந்துறை 17, அம்மாபேட்டை 16, கவுந்தப்பாடி 12, மொடக்குறிச்சி 11, தாளவாடி 8, சென்னிமலை 4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT